இலங்கையில் இன்று பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் எரிபொருள் நிலையங்கள் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளில் நேரடி, வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பள்ளிகள் இன்று திறக்கபடவிருந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை காரணமாக மேலும் ஒருவாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை அரசு, விடுபட்ட பாடங்களை அடுத்து வரும் விடுமுறை காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…