Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ட்ரெண்டிங்கில் #JusticeforSrimathi.. மாணவி மர்ம மரணத்தில் விடை கிடைக்குமா?

Sekar July 17, 2022 & 12:50 [IST]
ட்ரெண்டிங்கில் #JusticeforSrimathi.. மாணவி மர்ம மரணத்தில் விடை கிடைக்குமா?Representative Image.

கள்ளக்குறிச்சியில் 12ஆம் மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து, Justice for Srimathi என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஸ்ரீமதியின் படங்களுடனும், சுவர்களில் படிந்துள்ள ரத்தக்கறைகளுடனும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன.

கள்ளக்குறிச்சி மாவத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. 

சக மாணவர்கள் மற்றும் தோழிகள் முன்னிலையில் ஆசிரியர்கள் மாணவியை திட்டியதால் விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தற்கொலையில் அவரது குடும்பத்தினர் தரப்பில் பல சந்தேகங்கள் உள்ளன.

ஸ்ரீமதியின் தாயார் கூறுகையில், தனது மகளின் உடலை மருத்துவமனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே ஏழு மாணவர்கள் அந்த பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கூறினார். ஸ்ரீமதியின் குடும்பத்தினர் சேலம் நெடுஞ்சாலையில் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீமதிக்கு நீதி கோரி பலரும் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், பல பிரபல யூடியூபர்கள் ஸ்ரீமதி தற்கொலை வழக்குக்காக குரல் கொடுத்து வருகின்றனர். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் உண்மை நிலை இதுவரை வெளியாகவில்லை. இதுவரை இரண்டு ஆசிரியர்கள் போலீஸ் காவலில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்