Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனைவருக்கும் குரங்கம்மை பரிசோதனை.. அரசு உத்தரவு!!

Sekar July 16, 2022 & 13:46 [IST]
அனைவருக்கும் குரங்கம்மை பரிசோதனை.. அரசு உத்தரவு!!Representative Image.

மாமல்லபுரத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை செய்வதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. போட்டிகள் அனைத்தும் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. 

மேலும் இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது தான் முதல்முறையாக நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் போட்டி மற்றும் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பல நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்