Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடங்கியது.. மாணவி ஸ்ரீமதியின் இறுதி சடங்கு - கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்..!

Bala [IST]
 தொடங்கியது.. மாணவி ஸ்ரீமதியின் இறுதி சடங்கு - கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்..! Representative Image.

ஸ்ரீமதியின் சொந்த ஊரான பெரிய நெசலூரில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்துக்குள் வெளியாட்கள் நுழையவும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக இருந்தது, தற்போது புதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் புதைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறுதிச் சடங்கில், அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்கக் கூடாது என மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்