தேசிய விருதுகள் பெற்ற திரைப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரைத்துறையை ஆளட்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சூரரை போற்று' திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது நடிகர் சூர்யா கூறியுள்ளார். மேலும், பல ஆண்டுகள் உழைத்த இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும், இந்த தேசிய விருது அங்கீகாரம் நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…