பழம்பெரும் நடிகரும், திரையுலகின் ஆல் ரவுண்டருமான டி.ராஜேந்தர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ராஜேந்தர் குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…