பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் உள்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.
சுந்தந்திர தின விழாவை சீர் குலைக்கும் வகையில் நாட்டின் முக்கிய பகுதிகளில் தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்தது. இந்நிலையில், ஜம்மு, காஷ்மீரில் இந்திய வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் தமிழக வீரர் உள்பட 3 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனைதொடர்ந்து ஜம்மு, காஷ்மீரில் பணியில் உள்ள இந்திய வீரர்கள் உஷார் படுத்தப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…