கோயம்புத்தூர்: மூன்று கிறிஸ்தவ மத போதகர்களை தாக்கியதாக இந்து முன்னணி பிரமுகரை போத்தனூர் போலீசார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் இந்து முன்னணியின் கோவை சுங்கம் பகுதி நகரப் பொதுச் செயலாளர் நஞ்சுண்டாபுரம் கிழக்கு தேவேந்திர தெருவைச் சேர்ந்த பி.உத்தமன் (31) என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது; தூத்துக்குடி வெள்ளைப்பட்டி மீனவர் காலனியை சேர்ந்த ஸ்பெண்டி லேபர்சன் (33), ராஜசேகர் மற்றும் செல்வம் ஆகியோர் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கோவை மாவட்டம் சுங்கம் அடுத்த நஞ்சுண்டாபுரத்திற்கு சென்றுள்ளனர். கையில் பைபிள் மற்றும், கிறுஸ்தவ சட்டை அனிந்த அவர்களை கண்ட உத்தமன் என்பவர், உள்ளூரில் கிருஸ்தவ மதத்தை பரப்புவதாக குற்றம் சாட்டி அவர்களை தாக்கியுள்ளார்.
மேலும் அந்தப் பகுதியில் பிரசங்கம் செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் பாதிரியார்களை மிரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உத்தமனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…