கொரோனா வைரஸால் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ், 300-க்கும் அதிகமான துணை வைரஸ்களை உருவாக்கி வருவதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது, ஒமிக்ரான் குறித்த அதிர்ச்சி தகவலை, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்புகள் இன்னும் முற்றிலும் ஒழியாத நிலையில், கொரோனா வைரஸால் பரவிய ஒமிக்ரான் வைரஸும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஒமிக்ரான் புதிய மாறுபாடு அடைந்து வருவதாகவும், இவை பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும், சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை ஒமிக்ரான் வைரஸில் BA.2 துணை மாறுபாடு அச்சுறுத்தி வருகிறது. இது XBB என்ற துணை மாறுபாடாக உருமாறி தற்போது கொரோனா அலையை உருவாக்க வாய்ப்புள்ளதாக WHO-வின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், இரண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…