Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இரவில் நீர் திறப்பை அதிகரிக்கக்கூடாது :- முதல்வர் அறிவுறுத்தல்..!

Bala August 04, 2022 & 15:32 [IST]
இரவில் நீர் திறப்பை அதிகரிக்கக்கூடாது :- முதல்வர் அறிவுறுத்தல்..!Representative Image.


வெள்ள பாதிப்பு தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்கும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை  நடத்தினார். அந்தக் கூட்டத்தில்,  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும்,  தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் 
,தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும்  என ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும்,  மாவட்ட நிர்வாகம் வழங்கும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்,  நீர் வெளியேற்றும் அளவை இரவு நேரத்தில் அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்