Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்களுக்கு ஷாக்.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

Sekar September 14, 2022 & 17:58 [IST]
மாணவர்களுக்கு ஷாக்.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!Representative Image.

தமிழகத்தில் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதில் சிக்கல் எழுந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் தான் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் கல்வித் திறன்களை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து  அரசு, சமீபத்தில் தான் மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது, பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எனவே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், சனிக்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த விடுமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்