Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எலி பேஸ்ட் மூலம் மாணவன் கொலை.. காரைக்கால் பகீர்!!

Sekar September 14, 2022 & 11:22 [IST]
எலி பேஸ்ட் மூலம் மாணவன் கொலை.. காரைக்கால் பகீர்!!Representative Image.

காரைக்காலில் மகளுடன் படிக்கும் சக மாணவனை சகாயராணி என்பவர் கொலை செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மாணவனை கொலை செய்தது எப்படி என்பது குறித்து சகாயராணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் பாலமணிகண்டன் என்ற 8 ஆம் வகுப்பு மாணவன் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், பாலமணிகண்டனுடன் பயிலும் சக மாணவியின் தாயார் சகாயராணி, காவலாளி மூலம் குளிர்பானத்தை வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து, காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராணிவை கைது செய்தனர். இந்நிலையில், மாணவன் பாலமணிகண்டனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ததாக சகாயராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னதாக, பேதி மருந்து மட்டும் கொடுத்ததாக ஏற்கனவே சகாயராணி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், தற்போது, கடையில் எலி பேஸ்ட் வாங்கி மாணவன் பாலமணிகண்டனை கொன்றதாக தெரிவித்துள்ளார். 

தனது மகளைவிட நன்றாக படித்ததால் பொறாமையில் மாணவன் பாலமணிகண்டனை சகாயராணி கொன்றது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்