முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் தனபால், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் சிகிச்சை எடுத்து வருவதாக பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
அதிமுகவின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…