Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி சனிக்கிழமையும் ஸ்கூல் இருக்கு… அரசின் அதிரடி உத்தரவு…

Gowthami Subramani September 16, 2022 & 10:35 [IST]
இனி சனிக்கிழமையும் ஸ்கூல் இருக்கு… அரசின் அதிரடி உத்தரவு…Representative Image.

தமிழ்நாடு அரசு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பள்ளிக்கூடங்களில் இனி சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பியதால், நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல், ஜூன் முதல் நேரடி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும், மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பல மாதங்களாக ஆன்லைன் முறையில் வீட்டில் இருந்து பழகி விட்டனர். இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவது, மன அழுத்தத்தை தர வாய்ப்புள்ளது என வாரத்திற்கு 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்ட அறிக்கையின் படி, மீண்டும் சனிக்கிழமைகளில் பள்ளிகளைத் தொடர்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் அளிக்கப்பட்ட தொடர் விடுமுறை காரணமாக, பாடங்களை முடிப்பதில் சற்று சிக்கல்கள் உள்ளது. இதற்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடந்தால், அது உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்