மாணவிகளுக்கு ரூ 1,000 உதவித்தொகைக்கான விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தெரிவித்திருந்தது. உதவிதொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது கட்டாயம் எனவும் உயர் கல்வித்துறை குறிப்பிட்டிருந்தது. இந்த திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு ஏராளமான மாணவிகள் விண்ணப்பத்துள்ள நிலையில், அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவிகள் கல்லூரிகளில் சென்று திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
மேலும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் திருத்தங்கள் செய்தலை விரைந்து மேற்கொள்ள உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…