பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்றைய தினம் மட்டும் கொரோனா 2 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்; தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், கொரோனா பாதிப்பு அதிகமானதால் கோவிட் கேர் செண்டர்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…