கள்ளக்குறிச்சியில் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த பரிசால், மாப்பிள்ளை உணர்ச்சிவசப்பட்டு, தேம்பித் தேம்பி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியினை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு மதி என்ற பெண்ணுடன் கடந்த 13 ஆம் தேதி கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமண வரவேற்பு கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்நிலையில் அறிவழகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர்கள், காலமான அறிவழகனின் தந்தையை பேனராக அச்சடித்து அறிவழகனுக்குப் பரிசாக வழங்கியுள்ளனர். திடீரென பேனரில் தந்தை முகத்தைப் பார்த்த அறிவழகன், உணர்ச்சிவசப்பட்டு தேம்பித் தேம்பி அழ, அது திருமணத்திற்கு வந்திருந்தோரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
மேலும் நண்பர்களின் வடிவில் தந்தையே நேரில் வந்து ஆசீர்வாதித்துள்ளார் என அறிவழகன் நண்பர்களை கட்டித் தழுவி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…