தமிழகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்; தமிழகத்தில் 1முதல் 9ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு திட்டமிட்டப்படி நாளை மறுநாள் பள்ளிகள் திறகப்படும் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பள்ளிகளில் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…