Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2வது நாளாக தொடரும் போராட்டம்.. தொழிலாளர்கள் வேதனை...!

Bala May 17, 2022 & 10:27 [IST]
 2வது நாளாக தொடரும் போராட்டம்.. தொழிலாளர்கள் வேதனை...!Representative Image.

பருத்தி மற்றும் நூல் விலையை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஜவுளி தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் பஞ்சு விலை புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து நூல் விலையை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால் ஜவுளி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்துக்கோரி நேற்று கவன ஈர்ப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் 2வது நாளாக இன்றும் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் ஜவுளிஉற்பத்தி மற்றும்ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் வீவிங் நிட்டிங் (Knitting) ஒனர்ஸ் அசோசியேஷன், கரூர் ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம், கரூர் நூல் வர்த்தகர் சங்கம் ஆகிய சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் ஜவுளி துறையை சார்ந்துள்ளவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்