Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாயின் கழுத்தில் கல்லைக் கட்டி ஆற்றில் தூக்கி வீசும் கொடூர சிறுவண்டுகள்...!

Bala July 20, 2022 & 15:21 [IST]
நாயின் கழுத்தில் கல்லைக் கட்டி ஆற்றில் தூக்கி வீசும் கொடூர சிறுவண்டுகள்...!Representative Image.

அப்பாவி குட்டி நாயின் கழுத்தில் கல்லை கட்டி வெள்ளத்தில் தூக்கி எறியும் சிறுவண்டுகளின் வீடியோ பார்பவர்களை பதற வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பல்லார்பூர் தாலுகாவில் தஹேலி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், சில சிறுவண்டுகள் நாய் ஒன்றை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து, அதன் கழுத்தில் கல்லை கட்டி அதனை தண்னீருக்குள் இழுக்கின்றனர். நாயும் நீருக்குள் மூழ்கிடாமல் இருக்க கடும் முயற்சி செய்து வருகின்றது. ஆனாலும் மனம் இறங்காத கல் நெஞ்சக்காரர்கள் நாயை தண்ணீரில் தூக்கி போடுகின்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதனைக்கண்ட விலங்கு நல ஆர்வலர் ஒருவர், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். புகாரின் பேரில், ஐபிசி 11(1), 119 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்பான செய்திகள்