பிரபல திரைப்பட இயக்குநரான இஸ்மாயில் ஷ்ராஃப் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு, திரையுலகிற்கு பெரிய இழப்பு என கூறி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் தனது முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அஹிஸ்தா அஹிஸ்தா, புலந்தி, தோடி சி பேவபாய், சூர்யா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் இஸ்மாயில் ஷ்ராஃப். இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இவருக்கு வயது 62. இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…