தமிழ் சினிமாவில் சிறப்பு மிக்க பாடல்களைப் பாடி, மக்களின் மனதில் நிறைந்தவர் இவர். புகழ்பெற்ற இசை நாயகனான ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் பம்பா பாக்யா. இவர் சர்கார் படத்தின் பாடலான சிம்டாங்காரன், 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல் உள்ளிட்ட பாடல்களைப் பாடி மிகப்பெரிய கவனம் பெற்றார்.
மேலும், இவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராவணன் படத்தில் இருந்து பாடியதைத் தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஹிட் ஆன பொன்னி நதி பாடலைப் பாடியவரும் இவர் தான் எனக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், பிகில் படத்தில் 'காலமே காலமே' பாடலும், இரவின் நிழல் படத்தில் 'பேஜாரா', பாகுபலி படத்தில் பெரிதும் கவனத்தை ஈர்த்த 'வந்தாய் ஐயா, வந்தாய் ஐயா' உள்ளிட்ட பாடல்களைப் பாடியவர் இவர்.
42 வயதாகும் இவருக்கு, நேற்று மதியம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, இதய துடிப்பு குறியந்து, சிறுநீரக செயல்பாடும் குறைந்தது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சிகிச்சை பலனின்றி, நேற்று மரணம் அடைந்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…