சிறுமி உயிரோடு தனது தாயாரால் புதைக்கப்பட்ட நிலையில் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னா அருகே உள்ள கிராமம் ஒன்றில் மயாணம் அருகே பெண்கள் விறகு எடுக்க சென்றுள்ளனர். அப்போது மயாணத்தில் இருந்து பெண்னின் அழுகுரல் கேட்டத்தை கண்டு அதிர்சியடைந்த பெண்கள் பேய் என்று அலறியடித்துக்கொண்டு ஒடியுள்ளனர். பின்னர் கட்டை, போன்ற ஆயுதங்களுடன் கல்லறைக்கு வந்த கிராம மக்கள் , சத்தம் கேட்ட பகுதியை நோக்கி சென்றுள்ளனர். அப்போது ஒரு குழியின் அருகே சத்தம் கேட்டத்தையடுத்து தோண்ட ஆரம்பித்தனர். அப்போது சிறுமியை உயிரோடு இருப்பதைக் கண்டு அதிர்சியடைந்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை மீட்ட கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தாயும், பாட்டியும், தன்னை கல்லறைக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது குழியின் உள்ளே தள்ளி மண்ணைக் கொண்டு மூடிவிட்டதாக கூறியுள்ளார், இதனைக்கண்டு அதிர்சியடைந்த போலீசார் சிறுமியின் தாயை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…