கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இந்த ஜூலை தொடக்கம் வரை நித்தியானந்தா இருக்கிறாரா? அல்லது இல்லையா? என்ற பல்வேறு குழப்பங்கள் எழுந்துவந்து. இந்நிலையில் குருபூர்ணிமாவை முன்னிட்டு இன்று நடத்தும் சிறப்பு ஆசி உரையில் கடந்த 2 மாதங்களில் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கடந்த இரண்டு மாதங்களாகா சிறு சிறு செய்திகள் மூலம் தனக்கு ஒன்று இல்லை என கூறிவந்தாலும், அவரது சீடர்கள் அவருக்கு உடல் நிலை சரியில்லை அதனால்தான் அவர் வெளியில் தோன்றவில்லை என கூறிவந்தனர். மேலும் அவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகின, அனால் நித்தியானந்தாவோ இங்கு என்னை நெருங்கும் சக்திகள் என எதுவும் இல்லை என பன்ச் டைலாக்குகள் பேசி வந்தார்.
ஆனாலும் அவர் நிரந்தரமாக தூங்கிவிட்டார் எழுந்து கூறி கைலாச முழுவது அவரது சிலைகள் பிரதிஷ்டிக்கப்பட்டுள்ளதாகவும், கைலாச முழுவதும் சீடர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின. இந்நிலையில் திடீரென கைலாஸாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் குரு பூர்ணிமாவான இன்று (ஜூலை 13) நித்தியானந்தா சிறப்பு தரிசனம் தருகிறார் நித்யானந்தா என்பது தான், அது. கடந்த இரு மாதங்களாக தன் முகத்தை காட்டாமல், அணிகலன்கள் இல்லாமல், முடங்கிப் போயிருந்த நித்யானந்தா, இன்று இரவு இந்திய நேரப்படி, 8 மணிக்கு நேரலையில் தோன்றி, தன் பக்தர்களுக்கு ஆசி வழங்கப்போகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆசி உரைக்கு நடுவே கடந்த 2 மாதங்களில் தனக்கு என்ன நடந்தது எனவும் எதற்காக வெளியே வரவில்லை என்ற தகவல்களையும் வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…