Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருடச் சென்ற இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை… அதுவும் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு..

Gowthami Subramani October 28, 2022 & 15:40 [IST]
திருடச் சென்ற இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை… அதுவும் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு.. Representative Image.

பெங்களூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து திருடச்சென்ற நபர் ஒருவர் அங்கேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் இந்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஷ்ராமி. இவர் கடந்த வாரம் குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார். நேற்று வீடு திரும்பிய இவர்கள், வீட்டில் நபர் ஒருவர் சடலமாக தூக்கில் தொங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்த அந்த நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் என்பதும், அவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருப்பதாகவும் தெரிய வந்தது.

மேலும் அவர், திருடச் சென்ற வீட்டிலேயே குளித்து முடித்து, சாமி கும்பிட்டு விட்டு, பிறகு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்