வீசப்பட்ட செருப்பு பத்திரமாக உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டபோது பாஜகவினர் செருப்பை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறியதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், என் கார் மீது வீசப்பட்ட 'பழைய ஏர்போர்ட் டெர்மினலின் சின்ட்ரெல்லாவின் செருப்பு பத்திரமாக உள்ளது. வேண்டுமென்றால் வந்து பெற்று கொள்ளலாம். உங்களுக்காக எனது ஊழியர்கள் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளனர் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…