தமிழகத்தில் வரும் 18ம் தேதி மணல் லாரிகள் ஓடாது என தமிழக அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஓவர் லோடு ஏற்றுவதை நிறுத்துவதாக அனைத்து மணல் லாரி உரிமையாளர்களும் முடிவு செய்தனர். ஆனால், தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள், லாரி உரிமையாளர்களை ஓவர் லோடு ஏற்றும் படி கட்டாயப்படுத்துகின்றனர். இதற்காக, 50 ஆயிரம் ரூபாய் முதல் கட்டாய 'மாமூல்' வசூலிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதைக் கண்டித்து, வரும் 18ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அதேநாளில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் வீடு கட்டுபவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என கூறப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…