கும்பகோணம் அருகே உயர் அழுத்த மின் கம்பியில் உரசிய லாரி தீப்பிடித்து எரிந்த சமபவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சாக்கோடை அருகே மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மண் மற்றும் கட்டுமான பொருட்கள் லாரிகள் மூலமாக கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் லாரி மூலம் மண் கொண்டுவரப்பட்ட போது, எதிர்பாரதவிதமாக மேலே சென்று கொண்டிருக்கும் உயர் மின் அழுத்த கம்பியின் மீது உரசியுள்ளது. அப்போது லாரியின் தீபிடித்து, டாயர்கள் வெடித்து சிதறியதால் அருகில் உள்ளவர்கள் பதறிப்போகியுள்ளனர்.
சுதாரித்துக்கொண்ட லாரியின் டிரைவர் முன்கூட்டியே கிழே இறங்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் பெரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மின்சாரம் தாக்கி லாரி தீபிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…