தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து கொலைமிரட்டல் விடுத்த மர்ம தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஒருவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீசின் ஒரு குழு பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் நேற்று இரவு ஒருவரை கைது செய்துள்ளது.
முன்னதாக, மும்பையில் உள்ள சர் ஹெச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு நேற்று இரண்டு அழைப்புகள் வந்தன. அதில் அடையாளம் தெரியாத அழைப்பாளர் தெற்கு மும்பையில் உள்ள அம்பானியின் இல்லமான ஆன்டிலியா'வுடன் மருத்துவமனையையும் குண்டு வைத்து வெடிக்கச் செய்வதாக மிரட்டியுள்ளார்.
மேலும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதற்காக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…