சேலம் அருகே மாடுகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சேலம் அடுத்த மேட்டுப்பாளையம் கல்லார் அருகே மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியுள்ளனர். இதனையடுத்து முகம் மற்றும் உடலின் மேற்பகுதி கருகிய நிலையில், மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக தகவல்றிந்து வந்த போலீசார் முன் விரோதம் காரணமாக ஆசிட் வீசப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாயில்லாத ஜீவன்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…