வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரான அமர் குஷ்வாஹா வெளியிட்டதாவது,’திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…