தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வரும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் டெய்லரிங், பியூட்டிஷியன், வேளாண்மை பொறியியல், பொது இயந்திரவியல், மின் சாதனங்கள் பழுது பார்த்தல் மற்றும் ஆடை வடிவமைத்தல் உள்ளிட்ட பல தொழிற் பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் குறைந்த அளவிலான மாணவர் சேர்க்கை உள்ள தொழிற் பாடப் பிரிவுகளை மூடுவதற்கு பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 11 ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்போது முதற்கட்டமாக மூடப்படும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பள்ளிகளில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நான் முதல்வன் திட்டம் மாணவர்களிடையே தொழிற்கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இருப்பதாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் தொழிற் கல்வி பாடப்பிரிவுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது முரண்பாடாக இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…