அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சாவூர் சென்றிருந்தார். இதையடுத்து தஞ்சாவூரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவர், நேற்று முதல் காய்ச்சல் மற்றும் ஒவ்வாமை யால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தஞ்சையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பதிவில் இதை உறுதிப்படுத்தியதோடு, சில நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்றும், யாரும் கவலைப்பட வேண்டாம், நேரில் பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் குறித்து மீனாட்சி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "அமமுக பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரன் நேற்று வயிற்றுவலி, வாந்தி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் அனுமதிக்கப்பட்டார். தேவையான மருத்துவ பரிசோதனைகள் முடிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவ குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…