தமிழகத்தில் 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களைக் கொண்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 2019இல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் இயங்கலாம் என இதேபோன்ற ஒரு உத்தரவு வெளியாகியிருந்தது. மூன்று வருடம் அமலில் இருக்கும்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், கொரோனா காரணமாக முதல் 6 மாதம் மட்டுமே இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது.
பின்னர் கொரோனா காரணமாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 3 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அது இந்த ஆண்டுடன் முடிவடைந்துள்ளதால், மேலும் 3 ஆண்டுகளுக்கு இதை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கடந்த 5 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 24 மணி நேரம் கடைகளை 2019இல் கூறப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் தற்போதும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…