தாலிபான்கள் மேல் அச்சம் காரணமாக ஆப்கானை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் மீண்டும் ஆப்கான் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய முன்னாள் ஆப்கானிஸ்தான் அமைச்சர், புதன்கிழமை காபூலுக்குத் திரும்பினார் என்று தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தாலிபான் அரசு அளித்த பாதுகாப்பு உறுதிமொழியை தொடர்ந்து அவர் காபூலுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஆகியோரின் அமைச்சரவையில் பணியாற்றிய குலாம் ஃபரூக் வார்டக், துருக்கியில் இருந்து ஆப்கானுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலான அதிகாரிகள் ஆப்கான் திரும்புவது பற்றி யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…