பம்பாய் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றம் நாள் இன்று.
மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து இந்த இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் இந்த இயக்கத்தின் முதற்கட்ட பணி, ஜூலை 1942ல் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழுவில் தொடங்கியது. அதன்பின்னர் ஆகஸ்ட் 8-ம் தேதி பம்பாயில் (தற்போதைய மும்பை) இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி, செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்தை வலியுறுத்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…