வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் தத்தளித்து வருகின்றனர்.
வன்னியர் சங்கத்தலைவரான காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைதொடர்ந்து பாமக சார்பில் அரியலூர் அடுத்த காடுவெட்டியில் ரூ.2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு மணி மண்டபத்திற்கு அஞ்சலி செலுத்த ஏராளமானவர்கள் வருவார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி அரியலூர் மற்றும் பெரம்பலூர் டாஸ்மாக் மேலாளர், அந்த மாவட்ட காவல்துறையினருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காஅடுவெட்டி குரு நினைவு தினத்தை முன்னிட்டு மீன்சுருட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அவரது நினைவு இடமான காடுவெட்டியில் அஞ்சலி செலுத்த உள்ளதால் பிற பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சட்டம் , ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள 22 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து செந்துரை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், டி.புலியூர், மீன்சுருட்டி,பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் வேதனையடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…