குற்றாலத்தில் நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் குற்றால அருவிகளில் நீர் வரத்து சீராகியுள்ளதால் பொதுமக்கள் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். அதன்படி இந்த வாரம் அங்குச் செல்ல இருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…