சென்னையில் தக்காளி விலை ரூபாய் 100ஐ தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைவாலும் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் இன்று தக்காளி விலை ரூ.10 உயர்ந்துள்ளதால் 1 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…