சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 55க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பெய்த தொடர் கனமழை மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைவாலும் தமிழகத்தில் தக்காளி வேலை உச்சத்தை தொட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் தக்காளியை விலையை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோடிக்கை விடுத்து வந்தனர். அதன்படி தமிழக அரசு சார்பில் பசுமை பன்னை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ரூபாய் 90க்கு விற்றகப்பட்ட தக்காளி இன்று கிலோவுக்கு ரூபாய் 35 குறைந்து 55க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 65க்கும், பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 63க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை வீழ்ச்சியால் இல்லத்தரசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.ஆனால் விவசாயிகள் திடீரென ஏற்ப்பட்ட விலை வீழ்ச்சியாக் நஷ்டமடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…