Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜெட் வேகத்தில் தக்காளி விலை - அமைச்சர் அறிவிப்பால் இல்லத்தரசிகள் நிம்மதி..

Bala May 20, 2022 & 11:19 [IST]
ஜெட் வேகத்தில் தக்காளி விலை - அமைச்சர் அறிவிப்பால் இல்லத்தரசிகள் நிம்மதி..Representative Image.

தமிழகத்தில் மழை காரணமாக வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என  அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும், வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவாலும் தக்காளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.அதன்படி நேற்ரைய தினம் சென்னை கேயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டதால் இல்லத்தரசிகள் வேதனையடுத்தனர். இதனைதொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி; தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன்படி, அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என  அமைச்சர் தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்