Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கனமழை எதிரொலி:- காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

Bala May 20, 2022 & 11:03 [IST]
கனமழை எதிரொலி:- காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கைRepresentative Image.

ஒகேனக்கல் வனப்பகுதியில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமனா சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்சியடைந்துள்ளனர். இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் நேற்று 19,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 51,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்றில் குளிக்கவோ, ஆடு, மாடுகளை வைத்து கொண்டோ ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகள் அருகில் செல்லாமல் பர்த்துக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்