தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் சென்ற சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…