திருச்சி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் சட்டையில்லாமல் மற்றோரு ஆசிரியையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சித்தாம்பூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகல் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில், சட்டையில்லாமல் இருக்கும், இரண்டு ஆசிரியர்கள், ஆசிரியையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலானது. இதனைக்கண்ட மாணவர்களின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். பெற்றோர்களின் புகாரையடுத்து தலைமை ஆசிரியர், போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மழையில் நனைத்து கொண்டு வந்ததால், சட்டை ஈராமனதாகவும், இதனால் சட்டையை உலர்த்திக்கொண்டு இருந்ததாகவும், அப்போது யாரோ சிலர் புகைப்படம் எடுத்து தவறுதலாக சித்தரித்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் இந்த புகார் விசாரணைக்கு போனாது, இது தொடர்பாக பேசிய சைபர் கிரைம் போலீசார், புகாருக்கு ஆளாகியுள்ள இரண்டு ஆசிரியர்களும் சித்தாம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்பு பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால் 2019-ல் அவர்கள் பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு சென்று விட்டார்கள். ஆகையால் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை என்றும், ஒரு வேளை இது இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு சென்ற நிலையில், இந்த பள்ளிக்கு ஏன் வந்தார் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…