2 ஆண்டுகளுக்கு முன், தன்னை 2 நிமிடங்களுக்கு காக்க வைத்த ரஷ்ய அதிபர் புடினை பதிலுக்கு காக்க வைத்து துருக்கி அதிபர் எர்டோகன் பாடம் புகட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான் போர் 150 வது நாளை கடந்து இன்றும் உக்கிரமாக நடந்து வருகிறது. உக்ரைன் போரில் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளதால் ரஷ்யாவின் பொருளாதாரம் தடுமாறி வருவதாக கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில், துருக்கி அதிபர் எர்டோகன் உடனான சந்திப்பின் போது, புடின் சுமார் 50 வினாடிகளுக்கு நின்ற படியே காத்துகொண்டிருந்தார். புடின் தன்னை சந்திக்க வரும் உலக நாட்டு தலைவர்களை மணி கணக்கில் காக்க வைப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், உக்ரைன் போருக்கு பின்னால் புடின் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…