ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், இது தீவிரவாத தாக்குதலா என விசாரிக்க தேசிய புலானய்வு அமைப்பு (என்ஐஏ) சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த கன்னையா லால் என்பவர் அப்பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட அவர், நபிகள் நாயகத்தை விமர்சித்த நுபூர் சர்மாவிற்கு ஆதாரவாக பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்காக அவர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். இதனையடுத்து நேற்று அவரது கடைக்கு சென்ற இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள், அவரை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும் அதனை வீடியோவாக பதிவிட்டும் வெளியிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு மட்டுமல்லாமல் ராஜஸ்தான் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தையல் கடைக்காரர் கொடூர கொலைசெய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தயல் கடைக்காரர் கொலை செய்யப்பட்ட விதம் ஐஎஸ் தீவிரவாதிகள் பின்பற்றும் பாணி என்று உளவுத்துறை தகவல் கிடைத்த நிலையில், இது தீவிரவாதிகள் செய்த சம்பவமா என்று விசாரிக்க, என்ஐஏவின் தனிப்படை அதிகாரிகள் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூருக்கு விரைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…