சுதந்திர தினத்தன்று ரஷ்யா தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும் என உக்ரைன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 6 மாதங்களை கடந்து இன்னும் உக்கிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போலந்து அதிபர் அண்ட்ரேஸ் ட்டூடாவுடன் இணைந்து கீவ்வில் செய்தியாளஎர்களை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்ததை உக்ரைன் புதன் கிழமை இன்று சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது. இந்த நாளை ஒட்டி ரஷ்யா தங்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உள்ளதாகவும், சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல் நடத்தினால் தங்களுடைய பதிலடி சக்தி வாய்ந்ததாக இருக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதிதான் சோவியத் யூனியனிலிருந்து உக்ரன் பிரிந்து தனி நாடாக செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…