சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 இலங்கை துறைமுகத்தில் இருந்து சீனா திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவின் யுவான் வாங் 5 என்ற சக்தி வாய்ந்த உளவு மற்றும் ஆராய்சி என இரட்டை பாவனை கப்பல் ஆகஸ்ட் 11 ம் தேதி முதல் 17ம் தேதி வரை எரிபொருள் நிரப்புவதற்கும், பராமரிப்பு பணி காரணமாகவும் இலங்கையின் அம்பந்தோட்ட துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்தது.
சீனாவின் இந்த உளவு கப்பலால் இந்தியாவின் தென் மாநிலங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி இந்த கப்பலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தபோதிலும் திட்டமிட்டபடி சீனாவின் இந்த கப்பக்ல் இலங்கை துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இந்த கப்பல் இலங்கையில் நிலை கொண்டிருந்த போது இந்தியா பெருங்கடலில் உள்ள இந்திய போர் கப்பல்கள் உஷார் படுத்தப்பட்டு தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தது. மேலும் விசாகப்பட்டிணத்தில் நிலை கொண்டிருந்த இந்தியாவின் சிக்னல்கள் இடைமறிக்கும் மின்னியல் போர் கப்பல் இந்திய பெருங்கடலில் நிலை நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இலங்கை நேரப்படி நேற்று மாலை 4:00 மணிக்கு சீனா புறப்பட்டு சென்றது. இலங்கையில் இருந்து புறப்பட்ட உளவுக்கப்பல், சீனாவின் ஜியாங் இன் துறைமுகம் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…