Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோபக்கார மனைவியை சமாதானப்படுத்த 2 நாள் லீவ் வேனும்...வைரலாகும் கிளர்க் கடிதம்...!

Bala August 03, 2022 & 19:21 [IST]
 கோபக்கார மனைவியை சமாதானப்படுத்த 2 நாள் லீவ் வேனும்...வைரலாகும் கிளர்க் கடிதம்...!Representative Image.

கோபக்கார மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வர 2 நாட்கள் விடுமுறை அளிக்கும் படி கிளார்க் தனது உயராதிக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள அரசு அலுவலகத்தில் கிளார்க் ஆக ஷம்சாத் அகமது என்பவர் பணியாற்றி வருகிறார்.இவருக்கும் இவரது கோபக்கார மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை நடந்து  வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அவரது மனைவி கோபித்துக்கொண்ட குழந்தைகளுடன் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கோபித்து கொண்டு சென்றுள்ள மனைவியை அழைத்து வர எனக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கும் படி தனது உயரதிகாரிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், என்னுடன் சண்டை காரணமாக என்னுடைய மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவளுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள். அவளை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வர நான் ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. நான் இதனால் மனதளவில் மிகவும் காயப்பட்டுள்ளேன். என்னுடைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு இரண்டு நாட்கள் விடுப்பு வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவருடைய உயரதிகாரி ஷம்சாத் அகமது-க்கு விடுப்பு வழங்கியுள்ளார். மேலும் பிரச்சனை எல்லாம் சரிசெய்து விட்டு அலுவலகம் வந்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்