9-ம் வகுப்பு சிறுமிக்கும்- இளைஞர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக வீண் வதந்திகள் பரவியதால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியில் உள்ள அனூப்ஷாஹர் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் மீது அதேபகுதியை சேர்ந்த டிங்கு என்பவர் வீண் வதந்திகளை பரப்பி வந்துள்ளார். இதனால் மணமுடைந்த அந்த சிறுமி பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து வதந்தி பரப்பிய டிங்கு, அருண், ரவீந்திரன் ஆகிய 3 பேர் மீது ஐபிசி 306 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வத்ந்திய பரப்பியதாக இந்த மூவரும் கிராம பெரியவர்கள் முன்னிலையில் நடந்த பஞ்சாயத்தில் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…